உள்நாட்டு செய்திகள்

ஜூன் 15 முதல் டெங்கு ஒழிப்பு வாரம் பிரகடனம்

டெங்கு நோய் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக வரும் 15-ஆம் திகதி முதல் டெங்கு ஒழிப்பு வாரத்தைப் பிரகடனப்படுத்துவதற்கு தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளது.

தற்போது நாடு முழுவதும் டெங்கு நோய் பரவல் அதிகரித்து வருவதன் காரணமாகவே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் சமூக வைத்திய நிபுணர் பிரஷிலா சமரவீர தெரிவித்துள்ளார்.

டெங்கு நுளம்புகள் உற்பத்தியாகும் இடங்களைக் கட்டுப்படுத்துவதற்காக, கடந்த 8, 9 மற்றும் 10 ஆகிய திகதிகளிலும் நாடு தழுவிய ரீதியில் விசேட நுளம்பு ஒழிப்புத் திட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

டெங்கு நோய் பரவலை மேலும் கட்டுப்படுத்துவதற்காக, உள்ளூராட்சி மன்ற மட்டத்தில் நுளம்பு ஒழிப்பு வாரம் ஒன்றைச் செயல்படுத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் சமூக வைத்தியர் நிபுணர் பிரஷிலா சமரவீர மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button