உள்நாட்டு செய்திகள்

வெசாக் தினத்தை முன்னிட்டு விசேட ரயில் சேவைகள்

வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு நாளை (30) முதல் பல விசேட ரயில் சேவைகள் அமுல்படுத்தப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

அனுராதபுரத்திற்குச் செல்லும் பக்தர்களினதும் மற்றும் மாத்தறை, திஹகொட, மிதெல்லவல புராதன ரஜமகா விகாரையில் நடைபெறவுள்ள அரச வெசாக் விழாவில் கலந்துகொள்ளும் மக்களினதும் போக்குவரத்து வசதிக்காக இந்த விசேட ரயில் சேவைகள் செயற்படுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதற்கமைய, நாளை (30) முதல் எதிர்வரும் 31 ஆம் திகதி வரை இந்த விசேட ரயில் சேவைகளை முன்னெடுப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button