உள்நாட்டு செய்திகள்
நாட்டின் பணவீக்கம் 7 வீதமாக அதிகரிக்க வாய்ப்பு

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் எரிபொருள் விலை உயர்வு காரணமாக நாட்டின் பணவீக்கம் 7 சதவீதமாக அதிகரிக்க வாய்ப்புள்ளதாக இலங்கை மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
மத்திய கிழக்கு போர் குறுகிய காலத்தில் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்ட போதிலும், அது நீண்ட காலம் நீடிப்பதால் நாட்டின் பொருளாதாரத்திற்கு கடுமையான தாக்கம் ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.




