உள்நாட்டு செய்திகள்
குடும்பத் தகராறுகாரணமாக வீட்டிற்குத் தீவைப்பு, இருவர் உயிரிழப்பு !

அனுராதபுரம், கலேன்பிந்துனுவெவவில் உள்ள வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் தந்தை மற்றும் மகள் உயிரிழந்துள்ளனர், குடும்பத் தகராறுகாரணமாகவே குறித்த வீட்டிற்கு தீ வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தீவிபத்தில் மேலும் நான்கு பேர் தீக்காயங்களுடன் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.




