வெளிநாட்டுச் செய்திகள்
ஈரானில் போராட்டம், 500 பேர் பலி !!

ஈரானில் அதிகரித்துள்ள பணவீக்கம் காரணமாக அங்கு அரசுக்கு எதிரான போராட்டங்கள் அதிகரித்துள்ளது, குறித்த பணவீக்கத்தினால் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளமையே குறித்த போராட்டங்களின் ஆரம்பப் புள்ளியாகும், இதனால் விரக்தி அடைந்துள்ள அந்நாட்டு மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டங்களில் ஈடுபட்டுவருகின்றனர்,
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 28ஆம் திகதி தொடங்கிய மக்களின் போராட்டம், ஈரானின் 31 மாகாணங்களில் 100 நகரங்களில் 15 நாட்களாக நீடித்து வருகிறது, போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் 500 ற்கும் மேற்பட்டவர்கள் இறந்துள்ளாதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது மேலும் 10,600 பேர் இதுவரை கைது செய்யப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகின்றது.




