உள்நாட்டு செய்திகள்
சொந்த கிராமத்தில் வசிக்கவே ஆசை – மகிந்த

தனது சொந்த கிராமத்தில் எனது காலத்தினை முன்னெடுக்கவே ஆசை எனவும்
இதை விடுத்து நான் கொழும்பில் குடியேறியுள்ளதாக வெளியான செய்திகள்
பொய் எனவும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இருப்பினும் தனது தேவைகளை பொறுத்து கொழும்புக்குச் செல்ல வேண்டி நேரிடலாமெனவும் குறிப்பிட்ட அவர், தனது சொந்த கிராமத்தை விட்டு வெளியேறி கொழும்புக்கு திரும்பும் எண்ணம் தனக்கு இல்லை எனவும் குறிப்பிட்டார்.




