விளையாட்டுச் செய்திகள்
ஆடுகள நிலைமைகள் போட்டியை மாற்றும் – டசுன் ஷனகா

ஐ.சி.சி டி20 உலகக் கோப்பையில் ஆடுகள நிலைமைகள் ஸ்ட்ரைக் ரேட் மற்றும் ஆட்டமிழப்புகளை
கணிசமாக மாற்றக்கூடும் என்று இலங்கை அணித் தலைவர் டசுன் ஷனகா நம்பிக்கை கொள்வதாக
தெரிவித்துள்ளார்.
போட்டிகளுக்கு முன்னைய செய்தியாளர் சந்திப்பிலேயே இவ் விடையத்தினைக் குறிப்பிட்டுள்ளார் மேலும்
“இந்தியா ஏன் நன்றாக ஸ்கோர் செய்கிறது, இலங்கை ஏன் தடுமாறுகிறது என்று எல்லோரும் கேட்கிறார்கள்.
அது பெரும்பாலும் சூழ்நிலைகளைப் பொறுத்தது,” என்றும் அவர் குறிப்பிட்டார்.
இலங்கை அணி விளையாடிய கடந்த மூன்று போட்டிகளில் தொடர் தோல்விகளின் பின்னர்
ஐ.சி.சி டி20 உலகக் கோப்பைக்கான போட்டியில் விளையாடவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.




