வெளிநாட்டுச் செய்திகள்

கொங்கோவை தொடர்ந்து பிரேசிலிலும் எபோலா வைரஸ்

பிரேசில் நாட்டில் எபோலா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படும் இருவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சாவோ பாலோ மற்றும் ரியோ டி ஜெனிரோ ஆகிய நகரங்களைச் சேர்ந்த இருவரே இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

உகாண்டாவிலிருந்து வருகை தந்த பெல்ஜியம் நாட்டவர் ஒருவருக்கும், கொங்கோ நாட்டைச் சேர்ந்த ஒருவருக்குமே காய்ச்சல் உள்ளிட்ட ஆரம்பகட்ட அறிகுறி தென்பட்டதை அடுத்து, அவர்கள் அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கு எபோலா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்வதற்கான மருத்துவப் பரிசோதனை அறிக்கைகள் அடுத்த வார தொடக்கத்தில் வெளியாகும் என பிரேசில் சுகாதாரத் துறை அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button