உள்நாட்டு செய்திகள்
ஈரானுக்கே எமது ஆதரவு – நாமல்

தற்போது மத்திய கிழக்கு நாடுகளுக்கிடையில் இடம்பெற்றுவரும் யுத்தத்தில் இலங்கையின்
உற்ற நண்பனாக விளங்கிய முன்னாள் ஈரானிய ஜனாதிபதி ஹ்மூத் அகமதிநெஜாத் வான்
தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டதையறிந்து மிகவும் அதிர்ச்சியடைந்ததாக ஸ்ரீ லங்கா
பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல்
தெரிவித்துள்ளார்.
கடந்த 2008ஆம் ஆண்டு இலங்கைக்கு விஜயம் செய்த ஈரானிய ஜனாதிபதி ஹ்மூத் அகமதிநெஜாத்
சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம், உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தி திட்டம்
என்பவற்றுக்கு உதவியுள்ளார் எனவும் குறிப்பிட்டிருந்தார் மேலும், இவரது ஆட்சிக்காலத்தில் ஈரான்
இலங்கையின் உண்மையான நண்பனாக விளங்கியது எனவும் அன்னாரின் குடும்பத்துக்கும்
ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்வதாகவும் நாமல் தெரிவித்துள்ளார்.




