உள்நாட்டு செய்திகள்
சட்ட விரோத எரிபொருள் சேமிப்பு, ஒருவர் கைது !

கோமரங்கல்ல பகுதியில் உள்ள ஒரு பண்ணையில் சட்டவிரோதமாக அதிக அளவு
டீசல் இருப்பை சேமித்து வைத்திருந்ததாக சந்தேக நபர் ஒருவரை பொலிஸார்
கைது செய்துள்ளனர், சட்டவிரோத எரிபொருள் சேமிப்பு தொடர்பாக கிடைத்த
தகவலைத் தொடர்ந்து பொலிஸ் அதிகாரிகள் சோதனை நடத்தினர் என்றும்
அதன்படியே அப்பகுதியில் உள்ள ஒரு கால்நடை பண்ணையில் சட்டவிரோதமாக
சேமித்து வைக்கப்பட்டிருந்த சுமார் 1,900 லிட்டர் டீசல் அடங்கிய 10 பீப்பாய்களை
பொலிஸார் கண்டுபிடித்தனர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.



