உள்நாட்டு செய்திகள்

நாடளாவிய ரீதியில் உள்ள அரச வைத்தியசாலைகளில் அடையாள வேலை நிறுத்தம் !

சட்டவிரோத இடமாற்றங்களைக் கண்டித்து, நாடளாவிய ரீதியில்
உள்ள அரச வைத்தியசாலைகளில் இன்றைய தினம் (2) அரச வைத்திய
அதிகாரிகள் சங்கம், காலை 8 முதல் நாளை (03) காலை 8 மணி வரை
24 மணி நேர அடையாள வேலைநிறுத்தத்தைத் ஆரம்பித்துள்ளது.

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் குறித்த பிரச்சினைக்கு எதிர்ப்பு
தெரிவித்து கடந்த செவ்வாய்க்கிழமை 24 மணி நேர அடையாள
வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டது. இருப்பினும், தங்களது பிரச்சினைகள்
தீர்க்கப்படாததால், இன்றும் தங்களது அடையாளப் வேலைநிறுத்தத்தைத்
தொடரப்போவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப்
பேச்சாளர் டொக்டர் சமில் விஜேசிங்க தெரிவித்தார்.

இந்த வேலைநிறுத்தக் காலத்தில் அவசர மற்றும் அத்தியாவசிய
சேவைகளுக்கான சேவைகள் முன்னெடுக்கப்படும் என்றும் அரச
வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் டொக்டர்
சமில் விஜேசிங்க மேலும் தெரிவித்தார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button