விளையாட்டுச் செய்திகள்

T20 உலகக் கிண்ணத்தை கைப்பற்றியது இந்திய அணி !

ஆவலோடு எதிர்பார்த்த T20 உலகக் கிண்ணத் தொடரின் இறுதிப்போட்டி நேற்று (08)
நரேந்திரை மோடி மைதானத்தில் நடைபெற்றது, இப்போட்டியில் இந்தியா – நியூசிலாந்து
அணிகள் பங்குபற்றின. நாணய சுழற்சியில் வென்ற நியூசிலாந்து அணி முதலில்
களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.

முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி , முதல் இன்னிங்ஸ் முடிவில் 05
விக்கெட்டுகளை இழந்து 255 ஓட்டங்களை பெற்று நியூசிலாந்து அணிக்கு 256 ஓட்டங்களை
வெற்றியிலகாக நிர்ணயித்தது இந்திய அணி. பதிலுக்கு துடுப்பாட களமிறங்கிய நியூசிலாந்து
அணிக்கு 10 ஓவர்கள் நிறைவிலேயே 5 விக்கெட்டுகள் வீழ்ந்தன. தொடர்ந்து ஓட்டங்களைப்
பெறுவதில் சரிவைச் சந்தித்த நியூசிலாந்து அணியின் தோல்வி போட்டியின் சில மணி நேரங்களிலேயே
தீர்மானமாகியது.

அதன் படி நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 159
ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வியடைந்து, அதன்படி இந்திய அணி இந்த ஆண்டுக்கான
T20 உலகக் கிண்ணத்தை தனதாக்கி தொடர்ந்து 2ஆவது முறையாக சம்பியன் பட்டத்தினை பெற்றுக்கொண்டது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button