உள்நாட்டு செய்திகள்

நீதிபதி ஒருவரை சாட்சியத்திற்கு அழைக்க இடைக்காலத் தடை

கொழும்பு மேல் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வரும் வழக்கு ஒன்றில் சாட்சியமளிப்பதற்காக, அவிசாவளை மேல் நீதிமன்ற நீதிபதி சஹன் மாபா பண்டாரவுக்கு நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அறிவித்து விடுக்கப்பட்டிருந்த அழைப்பாணைக்கு அமைய நடவடிக்கை எடுப்பதைத் தடுத்து மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்காலத் தடையுத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.

ஜனாதிபதி சட்டத்தரணிகளான உதித இகலஹேவா, ஃபர்மான் காசிம் மற்றும் சட்டத்தரணி சுகத் கல்தேரா ஆகியோரால் தாக்கல் செய்யப்பட்ட மனுவொன்றை பரிசீலித்த பின்னர் நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

இந்த மனு மீண்டும் ஜூன் மாதம் 12ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button