உள்நாட்டு செய்திகள்
ரயிலுடன் முச்சக்கரவண்டி மோதி விபத்து: இருவர் உயிரிழப்பு

சிலாபத்திலிருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த ரயிலுடன் முச்சக்கர வண்டி ஒன்று மோதி இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
இன்று (09) காலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
கந்தானை மற்றும் கபுவத்தைக்கு இடையிலான ரயில் கடவையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.




