உள்நாட்டு செய்திகள்
கலமெட்டிய கடலில் காணாமல் போன சிறுவர்களின் சடலங்கள் மீட்பு

ஹுங்கம, கலமெட்டிய கடலில் நேற்று (30) மாலை நீராடச் சென்றபோது அலையில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போன மூன்று சிறுவர்களின் சடலங்களும் இன்று (31) காலை மீட்கப்பட்டுள்ளன.
இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவத்தில் 12, 17 மற்றும் 18 வயதுடைய மூன்று சிறுவர்களே இவ்வாறு உயிரிழந்தனர்.
உயிரிழந்த மூவரும் ஹுங்கம பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.




