உள்நாட்டு செய்திகள்
தமிழ் மக்களுக்கான தீர்வில் அரசு கரிசனை ! -விஜித ஹேரத்

தமிழ் மக்களின் நீண்ட கால அரசியல் பிரச்சினைகளுக்கு நிரந்தரமான தீர்வை
வழங்குவதில் ஜனாதிபதி அநுரகுமார திஸநாயக்க தலைமையிலான அரசு உறுதியுடன்
செயற்படும் என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். தமிழ் மக்களை
இந்த அரசு ஒருபோதும் ஏமாற்றாது என்றும் அவர் குறிப்பிட்டார்.
கடந்த காலங்களில் தமிழ் மக்களுக்கு வாக்குறுதிகள் வழங்கிய போதிலும், அவை நடைமுறைப்படுத்தப்படவில்லை என்ற விமர்சனங்கள் காணப்பட்டது, அந்தத் தவறுகளை மீண்டும் செய்யாமல், உண்மையான மற்றும் நீடித்த அரசியல் தீர்வை வழங்குவதற்காக தற்போதைய அரசு பொறுப்புடன் செயற்படும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார் !




