உள்நாட்டு செய்திகள்

வெளிநாட்டு மின்னணு சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது

கடற்படை மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படை இணைந்து கிராண்ட் பாஸ் பகுதியில் முன்னெடுத்த விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக விற்க முயன்ற 31 வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அதன்படி, மேற்கு கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படைக் கப்பலான ரங்கல நிறுவனம், பொலிஸ் விசேட அதிரடிப்படையுடன் இணைந்து நடத்திய இந்த விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, சந்தேக நபர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். அங்கு, சந்தேக நபர் சட்டவிரோதமாக விற்க முயன்ற 31 மின்னணு சிகரெட்டுகளுடன் கைது செய்யப்பட்டார்.

மேலும், இந்தக் கூட்டு நடவடிக்கையின் மூலம் கைது செய்யப்பட்ட சந்தேக நபர், கொழும்பைச் சேர்ந்த 26 வயது இளைஞர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சந்தேக நபரும் மின்னணு சிகரெட்டுகளும் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக கிராண்ட் பாஸ் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டதாக கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button