உள்நாட்டு செய்திகள்
யால தேசிய சரணாலயத்தில் 5 சுற்றுலாப் பயணிகள் கைது

யால தேசிய சரணாலயத்திற்குள் வனவிலங்கு சட்டங்களை மீறிய குற்றச்சாட்டில் ஐந்து சுற்றுலாப் பயணிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவம் யால தேசிய சரணாலயத்தி ‘சுது வெலிமுல்ல’ பகுதியில் பதிவாகியுள்ளது.
சஃபாரி பயணம் சென்ற இரண்டு ஜீப் வண்டிகளில் இருந்த குழுவினர், சரணாலயத்தின் விதிகளை மீறி ஜீப் வண்டிகளில் இருந்து கீழே இறங்கி நடந்து சென்றுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அப்போது அவர்கள் வனவிலங்கு அதிகாரிகளையும் அச்சுறுத்தியுள்ளனர்.
அதன் பின்னர், சம்பந்தப்பட்ட நபர்களைக் கைது செய்து திஸ்ஸமஹாராம நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.




