உள்நாட்டு செய்திகள்

ஹேமசிறிக்கு எதிரான வழக்கின் தீர்ப்பு திகதி நிர்ணயம்

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்களைத் தடுக்கத் தவறியதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோவுக்கு எதிரான வழக்கின் தீர்ப்பை எதிர்வரும் ஜூலை மாதம் 31ஆம் திகதி அறிவிக்க நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்கு முன்னதாக கிடைத்த உளவுத்துறை எச்சரிக்கைகள் இருந்தபோதிலும், அவற்றைத் தடுப்பதற்கான உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தவறியதாக ஹேமசிறி பெர்னாண்டோ உள்ளிட்ட அதிகாரிகள் மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்தன.

இந்த வழக்கு தொடர்பான விசாரணைகள் நிறைவடைந்த நிலையில், வழக்கின் தீர்ப்பை 2026 ஜூலை 31ஆம் திகதி அறிவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button