விளையாட்டுச் செய்திகள்
இந்தியாவுடன் பாகிஸ்தான் விளையாடாது, முக்கிய அறிவிப்பு !

இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறவுள்ள ICC T20 உலகக்கிண்ணத் தொடரில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி பங்கேற்பதற்கு அந்நாட்டு அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது, இந்த நிலையில் எதிர்வரும் பெப்ரவரி 15 ஆம் திகதி இந்தியாவுக்கு எதிராக நடைபெறவிருந்த போட்டியில் மாத்திரம் பாகிஸ்தான் அணி விளையாடாது என தற்பொழுது அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகக்கிண்ணத் தொடரின் ஏனைய போட்டிகளில் பாகிஸ்தான் அணி பங்கேற்கும் நிலையில், இந்தியாவுடனான இந்தப் போட்டி குறித்த அறிவிப்பு கிரிக்கெட் இரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.




