விளையாட்டுச் செய்திகள்
இந்தியா பாகிஸ்தான் போட்டி, பொலிஸாரின் கோரிக்கை !

இந்தியா பாகிஸ்தான் போட்டி எதிர்வரும் 15 ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை
மாலை 07 மணிக்கு ஆர். பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெறவுள்ளது
அதன்படி இதற்காக விசேட பாதுகாப்பினையும் இலங்கை பொலிஸார் ஏற்பாடு செய்துள்ளனர்,
அதன்படி போக்குவரத்து நெரிசலையும், கூட்ட நெரிசலையும் தவிர்க்கும் விதமாக கிரிக்கெட்
மைதானத்தின் நுழைவாயில் பிற்பகல் 03.00 மணி முதல் திறந்து வைக்கப்படும்
என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆகவே பார்வையாளர்கள் தொடர் ஆரம்பிப்பதற்கு சில மணி நேரத்திற்கு முன்னரே
மைதானத்திற்கு வருகை தருமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் F.W.வுட்லர் தெரிவித்துள்ளார்.



