உள்நாட்டு செய்திகள்
மனைவி எரித்துக்கொலை, கணவன் கைது !

நேற்றைய தினம் (13) காலை மெதகம பகுதியில் 41 வயதுடைய பெண் ஒருவர்
தீ வைத்து எரிக்கப்பட்டதாகக் கூறப்படும் கொலை தொடர்பாக போலீஸார்
மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில் குறித்த பெண்ணின் கணவர்
கைது செய்யப்பட்டுள்ளார்.
கணவன் மனைவிக்கு இடையில் ஏற்பட்ட குடும்பத் தகராறே குறித்த சம்பவத்திற்கான
ஆரம்ப நிலையாக உள்ளது என பொலிஸார் தெரிவித்துள்ளனர் மேலும் இது தொடர்பில்
மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.




