உள்நாட்டு செய்திகள்

பலத்த காற்று தொடர்பில் விடுக்கப்பட்ட எச்சரிக்கை

நாளை (09) பிற்பகல் 03.30 மணி வரை செல்லுபடியாகும் வகையில் வளிமண்டலவியல் திணைக்களத்தினால் பலத்த காற்று தொடர்பான எச்சரிக்கை அறிவித்தல் ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.

நாட்டின் மேல் நிலவும் தீவிரமடைந்துள்ள தென்மேற்கு பருவக்காற்று நிலைமை காரணமாக, 4 மாகாணங்களுக்கும் மேலும் சில பகுதிகளுக்கும் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 40-50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய, சப்ரகமுவ, வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் திருகோணமலை மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் இந்த நிலைமை தாக்கம் செலுத்தியுள்ளதாக அந்த அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாட்டின் ஏனைய பகுதிகளில் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 30-40 கிலோமீட்டர் வேகத்தில் ஓரளவான பலத்த காற்று வீசக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button