உள்நாட்டு செய்திகள்
கடலில் நீராடிய மூன்று மாணவர்கள் நீரில் மூழ்கி மாயம்

ஹுங்கம, கலமெட்டிய கடற்பகுதியில் நீராடிக் கொண்டிருந்த மூன்று பாடசாலை மாணவர்கள் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர்.
12 முதல் 18 வயதுக்குட்பட்ட மூன்று மாணவர்களே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக தெரியவருகிறது.
காணாமல் போன மாணவர்களை கண்டறியும் நடவடிக்கையில் உயிர் காக்கும் பிரிவினர் ஈடுபட்டு வருகின்றனர்.




