விளையாட்டுச் செய்திகள்
கடைசி நேரத்தில் மாறிய போட்டி, போராடி தோற்றது இங்கிலாந்து !

ஐசிசி T20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது அரையிறுதி
போட்டியில் இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதிய நிலையில்,
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி முதலில் களத்தடுப்பில்
ஈடுபடத் தீர்மானித்தது, அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி
20 ஓவர்கள் நிறைவில் 07 விக்கெட்டுகளை இழந்து 253 ஓட்டங்களை பெற்று
இங்கிலாந்து அணிக்கு 254 ஓட்டங்களை வெற்றியிலக்காக நிர்ணயித்தது
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 20 ஓவர்கள் நிறைவில் 07
விக்கெட்டுகளை இழந்து 246 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வியடைந்தது,
அதன்படி இந்திய அணி 07 ஓட்டங்ளால் வெற்றியைப் பெற்று இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றது.




