உள்நாட்டு செய்திகள்
பெப்ரவரி 27, 28ஆம் திகதிகளில் கச்சதீவுத் திருவிழா

ஒவ்வொரு வருடமும் இடம்பெறும் வரலாற்றுச் சிறப்புமிக்க கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா எதிர்வரும் பெப்ரவரி மாதம் 27ஆம், 28ஆம் திகதிகளில் நடைபெற இருக்கின்றது, இவ்வருடம் இலங்கையிலிருந்து 4,000 பக்தர்களும் இந்தியாவில் இருந்து 4,000 பக்தர்களும் பங்குபற்ற அனுமதிப்பது என தீர்மானிக்கப்பட்டுள்ளது, கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா தொடர்பான முன்னாயத்த கலந்துரையாடல் நேற்றுக் காலை யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் மாவட்ட செயலாளர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் இடம்பெற்ற போதே மேற்படி விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது.




