உள்நாட்டு செய்திகள்
இலங்கை வருகிறார் இந்திய வெளிவிவகார அமைச்சர் !

இந்திய வெளிவிவகார அமைச்சர் திரு.ஜெய்சங்கர் அவர்கள் நாளை திங்கட்கிழமை (22) இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.
புயல், வெள்ளம், மண்சரிவு போன்ற பேரிடர்களில் சிக்கி அல்லாடும் இலங்கை மக்களை அதிலிருந்து மீட்டு அதற்கான உதவித்திட்டங்களை வழங்கும் பல நிகழ்வுகளில் திரு.ஜெய்சங்கர் அவர்கள் கலந்துகொள்வார் எனவும் இது தொடர்பிலான விடயங்களை கொழும்பில் வைத்து அறிவிப்பார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது, மேலும் மறுநாள் செவ்வாய்க்கிழமை (23) இலங்கையின் தமிழ்க் கட்சிகளின் பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடவுள்ளதாகவும் எதிர்பார்க்கப்படுகின்றது !



