உள்நாட்டு செய்திகள்
முன்வைக்கப்படவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை படு தோல்வியடைவது உறுதி – பிரதமர்

தனக்கு எதிராக எதிரணிகளால் முன்வைக்கப்படவுள்ள நம்பிக்கையில்லாப்
பிரேரணை தொடர்பில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். இந்தப் பிரேரணை படு தோல்வியடைவது உறுதி என்றும் அவர்
குறிப்பிட்டுள்ளார், நேற்றைய தினம் கண்டிக்கு விஜயம் மேற்கொண்ட பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அஸ்கிரிய மற்றும் மல்வத்து பீடங்களின் மகாநாயக்க தேரர்
களைச் சந்தித்து கலந்துரையாடினார், அதன்போதே குறித்த விடயத்தினை பகிர்ந்துகொண்டார்.



