உள்நாட்டு செய்திகள்
சிறையில் இருந்த காதலனுக்கு போதை கலந்த தேநீர், காதலி கைது !

சிறையில் அடைக்கப்பட்டிருந்த 24 வயது இளைஞர் ஒருவருக்கு போதைப்பொருள் கலந்த
பால் தேநீரை கொடுக்க முயன்ற 22 வயது பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக
பிலியந்தலை பொலிஸார் தெரிவித்துள்ளனர் மேலும் சந்தேக நபர் கொண்டு வந்த உணவில்
மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு சிறிய அளவிலான போதைப்பொருட்களையும் பொலிஸார்
பறிமுதல் செய்துள்ளனர்.
பொல்கசோவிட்ட பகுதியைச் சேர்ந்த சந்தேக நபர், போதைப்பொருள் குற்றச்சாட்டில் கைது
செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், நேற்று (22) மதியம் அவரது
காதலி என்று கூறப்படும் சந்தேக நபர் இளைஞரைப் பார்க்க சென்றுள்ளனர் அதன்போதே
குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.




