ஆரம்பத்திலேயே அதிக சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை !

2026 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் இலங்கைக்கு வருகை
தந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 600,000 ஐ தாண்டியுள்ளதாக
இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
ஜனவரி முதலாம் திகதி முதல் மார்ச் 11 ஆம் திகதி வரையான காலப்பகுதியில்
மொத்தம் 623,651 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக
குறிப்பிட்டுள்ளது. குறித்த காலப்பகுதியில் இந்தியாவில் இருந்து மட்டும் 115,772 பயணிகள்
சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளனர், பிரித்தானியாவில் இருந்து 66,164 பயணிகளும்,
ரஷ்யாவில் இருந்து 56,114 பயணிகளும், ஜேர்மனியில் இருந்து 45,939 பயணிகளும்,
சீனாவில் இருந்து 39,725 பயணிகளும் வருகைத் தந்துள்ளனர்.
இவர்களைத் தவிர பிரான்ஸ், அவுஸ்திரேலியா மற்றும் நெதர்லாந்து உள்ளிட்ட
நாடுகளிலிருந்தும் பெருமளவிலான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர்.
மேலும், மார்ச் மாதத்தின் முதல் 11 நாட்களில் மாத்திரம் 66,996 வெளிநாட்டு
சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி
அதிகார சபை மேலும் குறிப்பிட்டுள்ளது.




