உள்நாட்டு செய்திகள்
“பொடி லஸ்ஸி” நாட்டிற்குள் அழைத்துவரப்பட்டார்.

பெரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்களுடன் தொடர்புடைய “பொடி லஸ்ஸி” என
அழைக்கப்படும் ஜனித் மதுசங்க இன்று காலை இந்தியாவில் இருந்து அழைத்துவரப்பட்டார்.
அவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து கடுமையான பாதுகாப்பின் கீழ்,
குற்றப் புலனாய்வுத் துறையின் (CID) அதிகாரிகளுடன் அழைத்துச் செல்லப்பட்டார்.
தென் மாகாணத்தில் நடந்த பல கொலைகள் தொடர்பாகவும், ஜாமீன் நிபந்தனைகளை
மீறியதற்காகவும் குறித்த நபர் காவல்துறையினரால் தேடப்பட்டு வருவதாக காவல்துறை
ஊடகப் பேச்சாளர் தெரிவித்திருந்தார். சந்தேக நபர் மேலும் விசாரணைகளுக்காக காலி
குற்றப் புலனாய்வுத் துறையிடம் ஒப்படைக்கப்படுவார் என்று அவர் மேலும் குறிப்பிட்டிருந்தார்.




