
கடந்த 21.12.2025 அன்று முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் வசிக்கும் 13 வயது சிறுமி ஒருவர் ஒவ்வாமை காரணமாக மாஞ்சோலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்தார், குறித்த மரணத்தில் ஏற்பட்ட சந்தேகம் காரணமாக கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றை இன்று பொதுமக்கள் முன்னெடுத்தனர்,
மேலும் இது தொடர்பிலான முறைப்பாட்டு அறிக்கை ஒன்றும் வைத்திய சாலைப் பணிப்பாளருக்கு போராட்டக்காரர்களினால் வழங்கி வைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது !




