உள்நாட்டு செய்திகள்
நாளை முதல் சீரானவானிலை நிலவும் !

நாட்டில் காணப்படும் மழையுடனான வானிலை நாளை 15ஆம் திகதியிலிருந்து குறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
இதன்படி, இன்று (14) ஊவா, கிழக்கு மற்றும் மத்திய மாகாணங்களில் ஒரு சில இடங்களில் மழை பெய்யக்கூடும், அதே நேரத்தில் மேல் மாகாணத்திலும் காலி, மாத்தறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களிலும் பிற்பகல் 2.00 மணிக்குப் பிறகு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் அது போன்று ஏனைய இடங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் எனவும் எதிர்வுகூறப்பட்டுள்ளது.




