உள்நாட்டு செய்திகள்
கொழும்பில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் பலி

கொழும்பின் ஜிந்துப்பிட்டி பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மரணமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்,
குறித்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் அருகில் நின்ற ஓர் இளைஞர் மற்றும் யுவதிக்கு சிறிய காயங்கள் ஏற்பட்டதாகவும் பின்னர் மேலதிக சிகீச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது, மேலும் குறித்த துப்பாக்கிச் சூட்டினை நடாத்தியவர்கள் ஓர் முச்சக்கர வண்டியில் வந்து துப்பாக்கிச்சூட்டினை நடாத்திவிட்டு பின்னர் தப்பிச் சென்றதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.




