உள்நாட்டு செய்திகள்
களுத்துறையில் வர்த்தகர் கொலை – இருவர் கைது

களுத்துறை, வெட்டுமகட பகுதியில் வர்த்தகர் கொலை வழக்கில் முக்கிய சந்தேகநபரான இம்ரான் உட்பட இருவர் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் கைதுசெய்யப்பட்டுள்ளதாக வலான ஊழல் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
சந்தேகநபர்கள் தொடர்பாக முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின்போது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.




